கோப்பை நிரம்பிவிட்டது! நியூயார்க் மேயர் அறிவித்த அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு இனிமேல் நியூயார்க்கில் இடமில்லை என்று அந்நகர மேயர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்:

ஆப்பிரிக்கா, இலத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வருபவர்களை ஏற்றுக்கொள்வதில் அமெரிக்க மாகாண அரசுகளிடம் கருத்து வேறுபாடு தோன்றுகிறது. 

இது குறித்து நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கையில், “நியூயார்க் நகரமும் எங்கள் கோப்பையும் தற்போது நிரம்பிவிட்டது. அதனால் புலம்பெயர்ந்த மக்களுக்கு இனி இங்கு இடமில்லை. 

நியூயார்க்குக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சுமார் 90,000 பேர் புலம் பெயர்ந்து வந்துள்ளனர். இனியும் புலம் பெயர்ந்து வந்தால் அவர்கள் இங்கு தங்குவதற்கு இடமில்லை. 

இதனை நான் முன்னரே தெரிவித்திருந்தேன். அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை நேரடி சாட்சியாக பார்க்கிறோம்.

நியூயார்க்கில் வீட்டுகளின் விலை, உணவு, போக்குவரத்து மற்றும் பிற தேவைகளின் விலையானது, அமெரிக்காவில் பிற மாகாணங்களில் இல்லாத அளவுக்கும் உயர்ந்துள்ளது. நியூயார்க் நகரம் மட்டும், தேசியப் பிரச்சினையின் மொத்த எடையை சுமக்கிறது என்பது தவறு" என்று தெரிவித்துள்ளார் .

கடந்த ஆண்டு தொடக்கத்திலே, நியூயார்க் நகரில் புலம்பெயர்பவர்களால் உண்டாகும் நெருக்கடிகளை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும், நியூயார்க் நகர மேயருமான எரிக் ஆடம்ஸ் விமர்சித்திருக்கிறார். 

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடனையும் அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இந்தக் கருத்தை நியூயார்க் மேயர் மட்டுமல்ல, அமெரிக்காவின் சிகாகோ, வாஷிங்டன் டிசி போன்ற நகர மேயர்களும் முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New York file full mayor announced shocking information


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->