நைஜீரியாவில் சோகம்... ஆற்றில் கவிழ்ந்த படகு: மாயமான பயணிகள்! மீட்பு படையினர் தீவிரம்! - Seithipunal
Seithipunal


நைஜூரியா, வடகிழக்கு பகுதியில் உள்ள கரீம் லாமிடோ மாவட்டத்தின் ஆற்றில் இருந்து மையோ ரனேவா கிராமத்திற்கு படகு ஒன்று சென்றது. 

இந்த படகில் குழந்தைகள், வணிகர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அதிக பேர் பயணம் செய்ததால் பாரம் தாங்காமல் படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்ததில் படகில் இருந்தவர்கள் அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த மீட்டு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

இருப்பினும் இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 70-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதால் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

70-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, 

தற்போது வரை ஆற்றில் மீட்பு குழுவினர் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்து ஏற்பட்ட படக்கில் 104 பேர் பயணம் செய்துள்ளனர் என தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nigeria boat overturned river Passengers missing


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->