பிரேசிலில் போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே மோதல் - 9 பேர் எரித்துக் கொலை.! - Seithipunal
Seithipunal


பிரேசிலில் போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே மோதல் - 9 பேர் எரித்துக் கொலை.!

பிரேசில் நாட்டில் வடகிழக்கு பகுதியில் உள்ள பாகியா மாகாணம் சால்வடார் நகரில் போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. 

இந்த மோதலில் அந்த கும்பலை சேர்ந்த மர்மநபர்கள் அக்கம் பக்கத்தில்  அமைந்துள்ள வீடுகளுக்கு உள்ளே புகுந்து அவற்றை சூறையாடினர். அப்போது, 9 பேர் தீ வைத்து, எரித்து படுகொலை செய்யப்பட்டனர். 

இரண்டு பேரின் உடல்கள் பகுதியளவும், ஐந்து பேரின் உடல்கள் முற்றிலுமாக எரிந்து விட்டன. இரண்டு பேருக்கு தீயால் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாகியா மாகாணத்தில் கடந்த ஆண்டில் 6,600 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது அந்த நாட்டில் இரண்டாவது மிக பெரிய எண்ணிக்கை ஆகும். இந்த எண்ணிக்கை தேசிய சராசரியை விட அதிகம் ஆகும் என்று பிரேசிலின் பொது பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற என்.ஜி.ஓ. அமைப்பின் தகவல் தெரிவிக்கின்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nine peoples died in brezil for drugs kidnape gang fight


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->