பாகிஸ்தானில் பெரும் சோகம்..வெள்ளத்தில் சிக்கி 39 பேர் பலி.!!
Pakistan rain flood peoples died
பாகிஸ்தானில் கடந்த 4 நாட்களாக கன மழை பெய்து வருகின்றது. பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களுக்கு கனமழை தொடரும் என்று பாகிஸ்தான் வானிலை மையம் அறிவித்துள்ளது.
கனமழை காரணமாக பல்வேறு பகுதி வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து முற்றிலமாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் தீவிர மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானின் இதுவரை, வீடு இடிந்தும், மின்னல் தாக்கியும், வெள்ளத்தில் சிக்கியும் 39 பேர் உயிர் இழந்துள்ளனர். 2022 ஆண்டு பாகிஸ்தானின் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடதக்கது.
English Summary
Pakistan rain flood peoples died