போலீசார் மீது துப்பாக்கிச்சூடு - மர்ம கும்பலை சேர்ந்த 18 பேர் பலி! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்கா லிம்போபோ மாகாணத்தில் வங்கிகளுக்கு பணம் எடுத்துச் சொல்லும் வாகனங்களை வழி மறைத்து பணத்தை கொள்ளை அடிக்க ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாகனத்தை கொள்ளை கும்பல் வழிமறித்து கொள்ளையில் ஈடுபட்டிருந்தனர். 

இந்நிலையில் திடீரென கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதனால் போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர். 

அதில் 16 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police Firing mysterious gang 18 members killed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->