உக்ரைனின் 4 மாகாணங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு வாக்கெடுப்பு நடத்த திட்டம்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையான போர் கடந்த பிப்ரவரி மாதமி 24ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் 1000-கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இப்போரில் போராடிவரும் உக்ரைன் படைகள் இஸியம், பலாக்லியா மற்றும் குபியன்ஸ்க் நகரங்களை ரஷ்யாவிடமிருந்து கைப்பற்றியுள்ளன.

இதை தொடர்ந்து ரஷ்யா பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் மற்றும் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கொ்சான் மற்றும் ஸபோரிஷியா மாகணங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதற்கான வாக்கெடுப்பு வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த வாக்கெடுப்பு ரஷ்யாவுக்கு சாதகமாக முடியும் என்பதால் உக்ரைனுக்கு உதவி வரும் மேற்கத்திய நாடுகள் இந்த வாக்கெடுப்பை அங்கீகரிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russia to conduct poll to join Ukraine provinces with russia


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->