அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! படகு கவிழ்ந்து அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்! 78 பேர் பலி!
Tragedy in Congo 78 killed in boat accident
ஆப்பிரிக்க நாடான கிழக்கு காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் இருந்து வடக்கு கிவுவின் கோமா பகுதியை இணைக்கும் ஏரியில், 278 பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு படகு, அச்சு சுற்றிய கிடுகு துறைமுகம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நேற்று நிகழ்ந்த இந்த விபத்தில், அதிக பாரம் தாங்காமல் படகு திடீரென கவிழ்ந்தது. அதில் இருந்த பயணிகளில் பலர் ஏரி நீரில் மூழ்கினர். அவர்கள் மத்தியில் நீச்சல் தெரிந்தவர்கள் சிலர் கரையினை நோக்கி நீந்தி உயிர் தப்பினர்.
விபத்து நடந்ததும், மீட்பு குழு விரைந்து செயல்பட்டு தண்ணீரில் தத்தளித்த 10 பேரை உயிருடன் மீட்டது. இருப்பினும், இதுவரை 78 பேர் உயிரிழந்ததாகவும், இன்னும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படகில் அதிகளவான பயணிகளை ஏற்றிச் சென்றதே விபத்துக்குக் காரணம் என தொடக்க விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. மேலும், காணாமல் போனவர்களை தேடும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த கோர விபத்து, ஏற்கனவே சவால்களால் அவதிப்பட்டு வரும் காங்கோவின் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tragedy in Congo 78 killed in boat accident