யூரல் மலைப்பகுதியில் திடீர் காட்டுத் தீ - 21 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


யூரல் மலைப்பகுதியில் திடீர் காட்டுத் தீ - 21 பேர் பலி.!

ரஷியா - சைபீரியாவின் எல்லையில் யூரல் மலைப்பகுதி அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் ரஷியாவின் குர்கான் மற்றும் சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள பல கிராமங்கள் தீப்பிடித்தன. 

இந்த தீ விபத்தில் சுமார் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், இதுவரைக்கும் 21 பேர் இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இதுவரைக்கும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாததால் பலியானோரின் எண்ணிக்கை உயரலாம் என்று கருதப்படுகிறது. 

இதற்கிடையே காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில் அவசர நிலை உத்தரவை பிறப்பித்து அந்நாட்டின் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தக் காட்டுது தீ கோடை வெயில் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

twenty one peoples died for wildfire in ural forest


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->