திருமணத்திற்குச் சென்று விட்டு ஊருக்குத் திரும்பிய போது சோகம் - படகு கவிழ்ந்து 103 பேர் பலி.!!
103 peoples died for boat capsizes in nigeria
திருமணத்திற்குச் சென்று விட்டு ஊருக்குத் திரும்பிய போது சோகம் - படகு கவிழ்ந்து 103 பேர் பலி.!!
மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நாடுகளில் ஒன்று நைஜீரியா. இந்த நாட்டின் வடக்கே உள்ள நைஜர் மாகாணத்தில் எக்போடி என்ற கிராமம் உள்ளது. இங்கு ஒரு வீட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சியில் கிராமத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த நிலையில் இந்தத் திருமணம் முடிந்து சுமார் 300க்கும் மேற்பட்டோர் ஒரு படகில் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பி வந்துக் கொண்டிருந்தனர்.
அந்த படகில் பொதுமக்கள் மட்டும் இல்லாமல் ஒருசிலர் தங்களது இருசக்கர வாகனத்தையும் எடுத்து வந்திருந்தனர். அப்போது அதிக பளு காரணமாக திடீரென படகு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிறுவர்கள் உள்பட மொத்தம் 103 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்துக் குறித்து தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் சுமார் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளனர். மேலும், மாயமான பலரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். திருமணத்துக்கு சென்று விட்டு சொந்த ஊருக்குத் திரும்பிய போது படகு கவிழ்ந்த விபத்தில் மக்கள் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
103 peoples died for boat capsizes in nigeria