இது சூப்பர் ஸ்டார்களின் கண்கவர் நிகழ்ச்சி - விமான சாகசம் குறித்து முதல்வர் ஸ்டாலின் ட்வீட்.! - Seithipunal
Seithipunal


இன்று சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சாகச நிகழ்ச்சி காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த சாகச நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்க லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரைக்கு நேரில் வந்தனர். 

இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்கள். இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை ஏர் மார்ஷல் ஏ.பி.சிங், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் நேரில் கண்டனர்.

இந்த நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை நடத்திய இந்திய விமானப்படை வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- 

"சூப்பர் ஸ்டார்களின் கண்கவர் நிகழ்ச்சியை சென்னை மக்கள் ரசித்துள்ளனர். நமது இந்திய விமானப்படை ஹீரோக்களுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chief minister stalin tweet about air show


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->