#MarinaAirShow: 3 பேர் பலி! 230 பேர் மயக்கம்! சோகத்தில் முடிந்த சாகச நிகழ்ச்சி!
Chennai Air Show 2024
சென்னை மெரினாவில் இன்று நடந்த விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியை லட்சக் கணக்கில் மக்கள் திரண்டு பார்வையிட்டனர். சுமார் 15 லட்சம் பேர் பார்வையிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த விமான சாகச நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்ப முடியாமல் மக்கள் சுமார் 4 மணி நேரம் அந்தப் பகுதியிலேயே சிக்கித் தவித்தனர்.
இந்நிலையில், சென்னை மெரினாவில் இன்று நடைபெற்ற இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியைப் பார்வையிட வந்தவர்களில், 230 பேருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு உள்ளது.
இதில், 93 நபர்கள் 40 ஆம்புலன்ஸ்கள் மூலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெயிலின் தாக்கம் காரணமாக கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் (வயது 56) என்பவரும், 60 வயது முதியவர் ஒருவரும், கார்த்திகேயன் என்ற 34 வயது இளைஞரும் (மாரடைப்பால்) உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.