தேர்தல் முடிவு எதிரொலி : நேற்று சரிந்த பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம் என்ன? - Seithipunal
Seithipunal


இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஜூன் 1ம் தேதி மாலை வெளியாகின. அதில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று பெருவாரியான கணிப்புகள் கூறியிருந்தன.

இதையடுத்து ஜூன் 3 திங்கட்கிழமை பங்குச்சந்தையில் அதானி மற்றும் அம்பானி குழும பங்குகள் அதிவேகமாக உயர்ந்தன. மேலும் பங்குச்சந்தை புள்ளிகள் 23000க்கும் மேல் அதிகரித்தது. இந்நிலையில் நேற்று ஜூன் 4 ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

இதனால் பங்குச்சந்தை வரலாற்றிலேயே முதல் முறையாக நேற்று ஒரே நாளிலேயே 4000 புள்ளிகள் சரிந்தது. இது பங்குச்சந்தை வரலாற்றிலேயே மிக மோசமான சரிவு என்று  நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் முதலீட்டாளர்கள் நேற்று மிகுந்த நஷ்டம் அடைந்தனர்.

இந்நிலையில் நேற்று சரிந்த பங்குச்சந்தை புள்ளிகள் இன்று சிறிது உயர்ந்துள்ளன. அதன்படி மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று காலை 557 புள்ளிகள் உயர்ந்து 72 ஆயிரத்து 601 புள்ளிகள் உள்ளது. மேலும் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 127 புள்ளிகள் உயர்ந்து 22 ஆயிரத்து 7 புள்ளிகளாக உள்ளது. 

இந்நிலையில், மத்தியில் ஒரு நிலையான ஆட்சி அமையும்வரை, பங்குச்சந்தையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Todays Share Market Circumstances


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->