இன்று நள்ளிரவு முதல் தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு.!! - Seithipunal
Seithipunal


மத்திய நெடுஞ்சாலைத் துறை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சுங்க சாவடிகளில் கட்டணத்தை உயர்கிறது. அதன்படி சென்னை வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடியில் ரூபாய் 10 முதல் ரூபாய் 40 வரை கட்டணத்தை உயர்த்த போவதாக நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. 

சுங்க கட்டண உயர்வுக்கு மத்திய அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணங்கள் உயருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் ரூ. 5 முதல் ரூ. 240 வரை கட்டணம் அதிகரிக்கிறது.

சென்னை அருகே நல்லூர் சுங்கச்சாவடியில் 40% கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.ஒரு முறை கார் செல்ல கட்டணம் ரூ.50 என இருந்த நிலையில் நள்ளிரவு முதல் ரூ.70 ஆக உயர்த்தப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tolgate Price Rises Tomorrow


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->