" என் கடைசி மூச்சு வரை சினிமாவில் தான் இருப்பேன்" - நடிகர் மம்முட்டி!! - Seithipunal
Seithipunal


என் கடைசி மூச்சு வரை சினிமாவில் தான் இருப்பேன். சினிமாவை விடும் எண்ணமே இல்லை என பிரபல மலையாள நடிகர் மம்முட்டி கூறிவுள்ளார்.

மலையாள திரை உலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மம்மூட்டி 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவர் தமிழில் மௌனம், சம்மதம், அழகன், தளபதி, ஆனந்தம், மறுமலர்ச்சி உள்ளிட்ட பல படங்களின் நடித்துள்ளார். மம்மூட்டியும் ஜோதிகாவும் நடித்து சமீபத்தில் வெளியான காதல் தி கோர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் மம்மூட்டி அளித்த பேட்டியில், என் கடைசி மூச்சு வரை சினிமாவில் தான் இருப்பேன் சினிமாவை விடும் எண்ணமே இல்லை. என் மரணத்திற்கு பிறகு மக்கள் என்னை நினைவில் வைத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை.  காலம் கடக்க கடக்க மிக சிறந்த மனிதர்களை கூட மறந்து விடுவார்கள். ஆயிரக்கணக்கான நடிகர்களில் நானும் ஒருவன்.

அவர்கள் என்னை ஒரு வருடமோ அல்லது பத்து வருடமோ நினைவில் வைத்திருக்கலாம். அதன் பிறகு நினவில் வைத்திருக்க மாட்டார்கள். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நடிகர்களின் மறந்து விடுவார்கள். நாம் இந்த உலகத்தில் இல்லாவிட்டால் நம்மை பற்றி எப்படி தெரியும். உலகம் அழியும் வரை அனைவரும் நம்மை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சில நினைக்கலாம். ஆனால் அது எப்போதும் நடக்காது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I will be in cinema till my last breath Actor Mammootty


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->