கர்நாடக திரைத்துறையில் அதிர்ச்சி!.....17 நடிகர்கள் மீது 3391 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ரசிகர் ரேனுகாசாமியை கடத்தி கொலை செய்த வழக்கில்  நடிகர் தர்ஷன், இவரின் தோழி பவித்ரா கவுடா உட்பட 17  பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காமாட்சி பாலையா போலீசார் இந்த  கொலை வழக்கை விசாரித்து வரும் நிலையில், கைது செய்யப்பட்ட 17 பேரில் தர்ஷன் மற்றும் பவித்ரா கவுடா இருவரையும் முக்கிய குற்றவாளிகளாக சேர்த்து 3991 பக்க குற்ற பத்திரிக்கையை இன்று பெருநகர கூடுதல் தலைமை நீதிபதியிடம் வழங்கினர்.

7 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், பவித்ரா கவுடா, தர்ஷன் மீது கடத்தல், கொலை, தடயத்தை அழித்தல், சட்டத்திற்கு புறம்பாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் 231 வகையான ஆதாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதில் 3 நேரடி சாட்சியம் உட்பட 97 சாட்சியங்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதுடன் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கின் குற்றவாளி தர்ஷனுக்கு வரும் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவல்  நீட்டிக்கப்பட்டு உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka film industry shocked 3391 page charge sheet filed against 17 actors


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->