அரசு ஊழியரின் சொத்து & கடன் தனிப்பட்ட விவரங்கள் அல்ல - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத் துறையின் உதவிப் பொறியாளர் தொடர்பான வழக்கில், அரசு ஊழியரின் சொத்துகள் மற்றும் கடன்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த உதவிப் பொறியாளரின் சொத்து விவரங்களை வழங்கக் கோரி, சீனிவாசன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.  

மாநில தகவல் ஆணையம் சொத்து விவரங்களை வழங்க மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுவில், நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீண்டும் பரிசீலித்து, இரண்டு மாதங்களில் இறுதி உத்தரவை பிறப்பிக்க மாநில தகவல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.  

நீதிமன்றம் மேலும், அரசு ஊழியர்களின் சொத்துச் சரிவை பொதுமக்கள் அறிந்து கொள்வது அரசுத் துறைப் பணியாளர்களின் செயல்திறன் மற்றும் நேர்மையை மேம்படுத்த உதவும் பொதுநலத்தில் மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CHennai HC Govt Staffs


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->