மாமன்னன் தடை கோரிய வழக்கு! சட்ட ஒழுங்கை காவல்துறையினர் பார்த்துக் கொள்வார்கள் - உயர்நீதிமன்ற கிளை அதிரடி! - Seithipunal
Seithipunal


மாமன்னன் படத்துக்கு தடை கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற கிளை மறுப்பு.

நெல்லை : பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அவரின் அந்த மனுவில், இயக்குநர் மாரி செல்வராஜ் ஒரு சமூகத்தை சார்ந்த படங்களை மட்டுமே எடுத்து வருகிறார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள மாமன்னன் படத்தின் பாடல் மற்றும் டிரைலர் இரு சமூகத்தின் இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரை 'மாமன்னன்' என்று அழைப்பார்கள். அவரை தவறாக சித்தரிக்கும் வகையில் இந்த படம் அமைந்துள்ளது.

இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ள உதயநிதி சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் உள்ளார். அவர் இந்த படத்தில் நடித்திருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் 173 பிரிவு 7க்கு எதிராக உள்ளது.

இந்த படம் வெளியானால் இரு சமூகத்தின் இடையே நேரடியாக பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

மேலும் இந்த படத்தை ஓட்டி உள்ளிட்ட வேறு எந்த தளங்களிலும் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்று, வலியுறுத்திய மணிகண்டன், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், மாமன்னன் படத்துக்கு தடை கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

அனைவருக்கும் கருத்து உரிமை, பேச்சு உரிமை உள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால், அதனை காவல்துறையினர் பார்த்துக் கொள்வார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maamannan Movie Case issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->