பாடலாசிரியர் சினேகனை அவமதித்த விருமன் படக்குழு.. வருத்தத்துடன் சினேகன் வெளியிட்ட பதிவு.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் மதுரையில் 'விருமன்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு எனக்கு அழைப்பு கூட இல்லை என இந்த படத்தின் பாடலை எழுதிய பாடலாசிரியர் சினேகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மதுரையில் 'விருமன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் மட்டுமின்றி சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பாரதிராஜா, ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் 'வானம் கிடுகிடுங்க' என்ற பாடலை எழுதிய பாடலாசிரியர் சினேகன் தனக்கு 'விருமன்' பாடல் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பிதழ் கூட வரவில்லை என்றும் இன்னும் கொஞ்ச காலத்தில் பாடலாசிரியர் என்ற இனமே இல்லாமல் போய்விடும் என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Poet snehan not invite in viruman audio launch


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->