தமிழ் சினிமாவுக்கு மோசமான சூழ்நிலை! அக்டோபர் 30-ம் தேதிக்குள் முடித்துக்கொள்ளுங்க! சிக்கலில் தனுஷ்!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் இப்போது இருக்கக்கூடிய ஒரு மோசமான சூழ்நிலையை இருப்பதாகவும், இதனை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் சேர்ந்து கூட்டம் ஒன்று இன்று நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதுகுறித்து வெளியான தகவலின் அடிப்படையில், 

16.8.2024 முதல் புதிய திரைப்படங்கள் துவங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் படபடிப்புகளை வருகிற அக்டோபர் 30-ம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு தயாரிப்பாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.

01.11.2024 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து விதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நடிகர் தனுஷை வைத்து படம் எடுக்க முடிவெடுப்பவர்கள், தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்தாலேசித்த பின்னர் படத்தை கமிட் செய்ய வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றிப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளரிடம் பணத்தை வாங்கிவிட்டு படத்தை முடித்து கொடுக்கவில்லை என்றும், ராயன் படத்திற்கு முன்புபே அட்வான்ஸ் வாங்கிய படங்கள் தற்போது வரை நிலுவையில் இருப்பதாகவும் புகார் எழுந்ததன் காரணமாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Cinema In Worst Stage issue


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->