சினிமாவில் எனக்கு எந்த சென்டிமென்ட்டும் இல்லை - விஜய் ஆண்டனி ..!!
Vijay Antony Speaks About Movie Sentiments
விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "மழை பிடிக்காத மனிதன்".இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் தனஞ்செயன், சிறப்பு விருந்தினராக பிச்சைகாரன் பட இயக்குனர் சசி மற்றும் தயாரிப்பாளர் டி. சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய விஜய் ஆன்டனி, "நானும், இயக்குனர் விஜய் மில்டனும் 20 ஆண்டுகால நண்பர்கள். அவர் இயக்குனராக ஆகாமல், ஒளிப்பதிவாளராகவே இருந்திருந்தால், இந்நேரம் இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்திருப்பார்.
![](https://img.seithipunal.com/media/j30.12.1-zy7cq.png)
நான் நடித்த படங்களிலேயே மிகப் பெரிய அளவில் வந்திருக்கிற படம் இந்த "மழை பிடிக்காத மனிதன்" திரைப்படம் தான். இதற்கு முன்பே நான் விஜய் மில்டனின் ஒரு கதையில் நடிப்பதாக இருந்து, அது நடைபெறவில்லை" என்று பேசினார்.
இதையடுத்து தமிழ் சினிமாவில் சகுனம் பார்க்கப் படுவது குறித்து கேட்கப் பட்ட கேள்விக்கு பதிலளித்த விஜய் ஆன்டனி, "சினிமாவைப் பொறுத்த வரை எனக்கு எந்த சென்டிமென்ட்டும் இல்லை. எந்த சகுனமும் நான் பார்ப்பதில்லை. ராகு காலத்தில் படம் எடுத்தால் ஓடாது என்றால் நான் ராகு காலத்திலேயே படம் எடுத்துக் காட்டுவேன். என் படத்தின் தலைப்பைக் கூட ராகுகாலம் என்று வைப்பேன். இதை நான் இங்கு பதிவு செய்கிறேன்" என்று பேசியுள்ளார்.
English Summary
Vijay Antony Speaks About Movie Sentiments