அண்ணாமலைக்கு தேமுதிகவில் இணைய தான் ஆசை - உண்மையை போட்டுடைத்த திருச்சி சூர்யா.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து திருச்சி சூர்யா யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது:- "அண்ணாமலைக்கு ஐபிஎஸ் பயிற்சியின் போதே அரசியல் ஆசை ஏற்பட்டுள்ளது. அப்போது அண்ணாமலை தேமுதிக தலைவராக இருந்த விஜயகாந்தை அவரது  வீட்டில் சென்று சந்தித்து, தான் தேமுதிகவில் இணைய விரும்புவதாக விஜயகாந்திடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு விஜயகாந்த், நல்ல பதவியில் இருக்கீங்கள், நல்ல இடத்தை அடைந்துள்ளீர்கள், இதன் மூலம் மக்களுக்கு சேவை செய்யுங்கள். நீங்கள் ஏற்கனவே அதிகாரத்தில் உள்ளீர்கள். கஷ்டம் என வருபவர்களுக்கு உதவி செய்யுங்கள், சட்டம் ஒழுங்கை சரியாக கவனியுங்கள் என்றுத் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அண்ணாமலைக்கு பாஜகவின் மூத்த நிர்வாகி பி எல் சந்தோஷ் தொடர்பு கிடைக்க அவர் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைய முடிவெடுத்தார். அதன் படி பதவியை ராஜினாமா செய்த பிறகு ஒரு வருடம் கழித்து தான் பாஜக மாநில துணை தலைவர் பதிவியும், பாஜக மாநில தலைவர் பதவியும் கிடைத்தது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trichi surya said annamalai like join dmdk


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->