1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மே 14 முதல் கோடை விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை.!
One to nineth class students summer holiday start may fourteen
தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க கோரிக்கை எழுந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு நடைபெறும் நாட்களில் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, மே 14 முதல் கோடை விடுமுறை அளிப்பதாக இன்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 13ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
One to nineth class students summer holiday start may fourteen