சாம்சங் விவகாரம் - பேச்சுவார்த்தையில் உடன்பாடு! - Seithipunal
Seithipunal


சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்களுடன், தமிழக அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாம்சங் நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சங்க விவகாரத்தில், தொழிலாளர்களின் பிரதிநிதி குழு ஒன்று அமைக்கப்பட்டு, பிரச்சினைகள் குறித்து பேசப்படும் என ஒப்பந்தத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த மாதம் முதல் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.5,000 சம்பள உயர்வு வழங்கி உள்ளதாக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் தெரிவிக்கையில், பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. சங்கம் அமைக்க அனுமதி அளித்தால் போராட்டத்தை வாபஸ் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

சாம்சங் நிர்வாகத்துடன் பேசுவதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக முடிவு இன்னும் எட்டப்படவில்லை. நிர்வாகத்தின் கருத்தை பெற்ற பின்னர் அடுத்த கட்டம் குறித்து பேசுவோம்" என்று சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samsung Workers Protest Kanchipuram  


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->