நாளை பல தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! முழு அடைப்பு எதிரொலி! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாளை இண்டி கூட்டணி சார்பாக முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி புதுச்சேரியில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு, ஜூன் மாதம் 16ஆம் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த மின் கட்டண உயர்வுக்கு புதுச்சேரி அதிமுக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என அனைத்து அரசியல் கட்சிகளும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வந்தன. 

நேற்று மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், நாளை இண்டி கூட்டணி சார்பாக புதுச்சேரி, காரைக்காலில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பேருந்து, டெம்போ, ஆட்டோ ஓடாது என்பதால், பல தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puduvai Karaikal INDI Alliance Protest Private School College leave


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->