கொத்தமல்லி இலை அழுகாமல் இருக்க இப்படி செய்யுங்கள்.!  - Seithipunal
Seithipunal


சமையலுக்கு பயன்படுத்துகின்ற கொத்தமல்லி இலைகள் வெகு சீக்கிரத்தில் வாடிவிடும். இதனை நாம் பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைத்து இருந்தாலும் கூட அழுகி விடக்கூடும். சில எளிய வழிகளை ஃபாலோவ் 2 வாரம் வரை வீணாகாமல் பாதுகாக்க முடியும்.

கொத்தமல்லி தழைக்கட்டின் வேர் பகுதியை நறுக்கி விடலாம். ஒரு அகலமான பாத்திரத்தில் குறிப்பிட்டளவு தண்ணீர் சேர்த்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து கொத்தமல்லி இலையை சற்று நேரம் அதில் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். அதன் பின், நன்கு கழுவி விட்டு பின் மின் விசிறியில் உலாத்தவும். 

கெத்தாக வித்தைக்காட்டும் சத்தான கொத்தமல்லி.! - Seithipunal

நீர்த்துளிகள் எதுவுமில்லாமல் நன்றாக உலர்த்தி விட்டு ஒரு பேப்பர் டவலில் ஒற்றி எடுத்துக் கொண்டு பின்பு கொத்தமல்லி தழையை பேப்பர் டவலில் சுற்றி மூடி விட்டு ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அந்த டப்பாவை எடுத்து பிரிட்ஜில் வைத்து சமையலுக்கு தேவைப்படும் பொழுது கொத்தமல்லி தழையை எடுத்து பயன்படுத்தலாம். சுமார் 2 வாரங்கள் வரை கொத்தமல்லி இலை அழுகி விடாமல் இருக்கக்கூடும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

coriander leaf benefits in tamil


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->