#BREAKING || ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர் - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள பிச்நாட் மச்சில் பகுதிக்கு அருகே பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர், குப்வாரா காவல்துறையினருடன் இணைந்து பயங்கரவாதிகளை தேடும் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையினர் இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் மேலும் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் மற்றும் குழு தொடர்பு கண்டறியப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 Terrorists Killed In Encounter in Kupwara Jammu Kashmir


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->