அந்தமான் நிக்கோபார் தீவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.!
4 point 0 magnitude earthquake hits Andaman and Nicobar island
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் போர்ட் பிளேரில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது இரவு 11.56 மணியளவில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில்கிழக்கு வடகிழக்கில் போர்ட்பிளேர் பகுதியில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 28 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கு முன்பாக கடந்த மார்ச் 6ஆம் தேதி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 208 கிலோமீட்டர் தொலைவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
4 point 0 magnitude earthquake hits Andaman and Nicobar island