சிக்கிமில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.!
4 point 3 magnitude earthquake strikes Sikkim
சிக்கிம் மாநிலத்தில் 4.3 ரிக்டர் அளவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் துருக்கியை தொடர்ந்து இந்தியாவிலும் கடந்த மூன்று நாட்களாக அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், சிக்கிம் மாநிலத்தில் உள்ள யுக்சோமுக்கு வடமேற்கே இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவாகியுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் சேதங்கள் அல்லது உயிர் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கு முன்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அசாமின் நாகோனில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
4 point 3 magnitude earthquake strikes Sikkim