லடாக் பகுதியில் 5 ராணுவ வீரர்கள் வெள்ளபெருக்கில் சிக்கி பலி! - Seithipunal
Seithipunal


லடாக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீன எல்லை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. சமீபத்தில் பெய்த மழையில் சீன எல்லை பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காணப்பட்டது. இதனால், ராணுவ விரர்கள் ஆற்றை கடக்கமுடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

இந்திலையில், லடாக் பகுதிகளில் உள்ள சீன எல்லையில் ஏற்பட திடீர் வெள்ளப்பெருக்கில் ராணுவ வீரர்கள் பயணித்த வாகனம் முழுகியதால் ஐந்து இந்திய ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

லடாக்கில் ஐந்து ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் தனது சமூகவலைதள பக்கமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ஆற்றைக் கடக்க முயன்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த தேசம் துணை நிற்கிறது என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 soldiers died in floods in Ladakh


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->