நாயை கிண்டல் செய்த 5 வயது சிறுவன்! தூக்கிப்போட்டு கழுத்தில் மிதித்த கொடூர ஓனர்! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலம் மொகாலி பகுதியில் நிகழ்ந்த பரிதாபகரமான சம்பவம், மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

5 வயதான சிறுவன், தனது நண்பருடன் டியூஷன் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு நாய் அவர்களை பார்த்து குறைக்கத் தொடங்கியது. அப்போது, சிறுவன் நாயின் குரலுக்கு பதிலளிக்கும் விதத்தில், அதனை கிண்டல் செய்யும் வகையில் குரல் எழுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த செயலை எடுத்து வைக்கமுடியாத நாயின் உரிமையாளர், சிறுவனை கண்டிப்பாகத் தண்டிக்க முடிவு செய்தார். அச்சிறுவன் தான் நாயை கேலிசெய்ததாகக் கருதி, சிறுவனை வெறி பிடித்தவனைப் போல பிடித்து தரையில் தூக்கி வீசி, பின்னர் கால் மற்றும் கையால் எட்டி மிதித்தார். சிசிடிவியில் பதிவாகிய இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை தூண்டியுள்ளது.

சம்பவம் வெளியாகியவுடன், மக்கள் கடும் கோபம் வெளிப்படுத்தி, சிறுவனை தாக்கிய நாய் உரிமையாளருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொடூர சம்பவம், சிறுவன் மற்றும் அவரது குடும்பத்துக்கு பேரதிர்ச்சியையும் வலியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள மக்கள், குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A 5 year old boy teased a dog The cruel owner who threw up and stepped on the neck


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->