#புதுச்சேரி || மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால், பொதுமக்கள் மின்வாரிய அலுவலகம், கம்பியூட்டர் இ-சேவை மையம் என்று அனைத்து இடத்திலும் மக்களின் கூட்டம் அலைமோதியது.

இந்த கூட்டத்தை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு சார்பில் பிரத்தியேக இணையதளம் உருவாக்கப்பட்டது. மேலும் மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. அதற்கான கால அவகாசம் கடந்த ஜனவரி 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், மேலும் இந்த மாத 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தை தொடர்ந்து, தற்போது புதுச்சேரியிலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்ட்டுள்ளது. அதற்காக புதுச்சேரி அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் அல்லது அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை மின் இணைப்போடு இணைக்க வேண்டும் என்கிற ஒரு வழிமுறையையும் புதுச்சேரி அரசு இணைத்து வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aadhaar number with electricity connection mandatory in Puducherry


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->