இந்திய நீதி அறிக்கை 2025; 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள்; மாவட்ட நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் விகிதாசாரம் அதிகரிப்பு..!
According to the 2025 India Justice Report there are only 15 judges per 10 lakh people
140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 21 ஆயிரத்து 285 நீதிபதிகள் மட்டுமே உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள் என்ற அளவிலேயே உள்ளதாக கூறப்படுகிறது. 1987 சட்ட ஆணைய பரிந்துரைப்படி 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தது.
இந்நிலையில், உயர் நீதிமன்றங்களில் இந்த ஆண்டில் நீதிபதி பணியிடங்களில் 21 சதவீத காலியிடங்கள் நிலவுகிறது. இதனால், அவர்கள் மீது அதிக பணிச்சுமை ஏற்பட காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது. அதேப்போல மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள ஒரு நீதிபதி சராசரியாக 02 ஆயிரத்து 200 வழக்குகளை கவனிப்பதாகவும், அலகாபாத் மற்றும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி, தலா 15 ஆயிரம் வழக்குகளை விசாரிப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாவட்ட நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் ஒட்டுமொத்த பங்கு, 2017-இல் 30 சதவீதத்தில் இருந்து 38.3 சதவீதமாக அதிகரித்துள்ளது, அதேப்போல, 2025-இல் உயர்நீதிமன்றங்களில் 11.4 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு உயர்நீதி மன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றங்களை ஒப்பிடும்போது, மாவட்ட நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் விகிதாசாரம் அதிகமாக உள்ளது. அங்கு 06 சதவீதம் பெண் நீதிபதிகள் உள்ளதாகவும், ஆனால், 15 உயர்நீதிமன்றங்களில் ஒரு பெண் தலைமை நீதிபதி மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட நீதித்துறையில், பழங்குடியின நீதிபதிகள் 05 சதவீதமாகவும், எஸ்.சி. பிரிவு நீதிபதிகள் 14 சதவீதமாகவும் உள்ளதாகவும், 2018 முதல் இதுவரை 698 ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் வெறும் 37 நீதிபதிகள் மட்டுமே எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு நீதிபதிகளின் பங்களிப்பு நீதித்துறையில் 25.6 சதவீதமாக உள்ளதாகவும், சட்ட உதவிக்கான தேசிய தனிநபர் செலவு ஆண்டுக்கு ரூ.6.46 ஆகவும், நீதித்துறைக்கான தேசிய தனிநபர் செலவு ஆண்டுக்கு ரூ.182 ஆகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதி வழங்குவதில் 18 பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்களில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது, அதாவது, 2022 முதல் கர்நாடகா இந்த முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளதுமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்த பட்டியலில் ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை கர்நாடகாவைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. டாடா அறக்கட்டளை மற்றும் வேறு சில சமூக அமைப்புகளின் உதவியுடன், இந்திய நீதி அறிக்கை-2025 என்ற பெயரில் புள்ளிவிவரங்களை சேகரித்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்திய நீதித்துறைக்கு தேவையான அடிப்படை மாற்றங்களை உடனடியாக நிறைவேற்றும் பொருட்டு இந்த அறிக்கை வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
According to the 2025 India Justice Report there are only 15 judges per 10 lakh people