பெரும் பரபரப்பு! ஒரே நேரத்தில் 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! கோடி கணக்கில் இழப்பு!
Airports Airlines Flights Vistara Bomb Threat
விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்கள் உட்பட 12 விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி - பிராங்பேர்ட், சிங்கப்பூர் - மும்பை, பாலி - டெல்லி, சிங்கப்பூர் - புனே செல்ல கூடிய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இண்டிகோ நிறுவனத்தின் புனே - ஜோத்பூர், கோவா - அகமதாபாத், கோழிக்கோடு - சவுதி உள்ளிட்ட விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மர்ம நபர்களின் இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளிகளால் சுமார் ரூ.80 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல் விடுவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அதிக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Airports Airlines Flights Vistara Bomb Threat