கெஜ்ரிவாலின் மேல் முறையீடு.‌. தேதி குறித்த உச்ச நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


டெல்லி அரசின் மதுபானம் கொள்கை முறையீடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாநில முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நிலையில் அவர் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 

அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் அமலாக்கத்துறையால் கைது செய்ததையும் அதனை தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருப்பதையும் ரத்து செய்ய வேண்டும் என தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அமர்வின் முன்பு வரும் ஏப்ரல் 15ம் தேதி விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arvind Kejriwal appeal case hearing on April15


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->