தெருநாய் கடித்துக் குதறியதில் ஒரு மாத குழந்தை பலி! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா : மாஹபூபாபாத் மாவட்டத்தில் தெருநாய் கடித்துக் குதறியதில் ஒரு மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் ஆங்காங்கே  நாய்கடி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்துகிறது. கடந்த மாதம் சென்னையில் மட்டும் 8க்கும் மேற்பட்டோர்களை நாய்கள் கண்டித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வளர்ப்பு நாய் கடித்ததில் படுகாயம் அடைந்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் வளர்ப்பு நாய் உள்ளிட்ட பிராணிகள் வளர்ப்பதற்கு அனுமதி கட்டாயம் என்று அறிவித்தார்.

தற்போது, தெலுங்கானாவின் மாஹபூபாபாத் மாவட்டத்தில் மடிப்பள்ளி கிராமத்தில் தெரு நாய் ஒன்று சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. வீட்டுக்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த  பிறந்து 42 நாட்களே ஆன குழந்தையை நாய் சரமாரியாக கடித்துக் குதறிவுள்ளது.

பலத்த காயம் அடைந்த அந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை கொண்டுவரும் வழியிலே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். 

இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், குழந்தையின் தாய் வீட்டு முன் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் அப்போது வீட்டுக்குள் வந்த நாய் குழந்தையை கடித்து குதறியாதாகவும் கூறியுள்ளார். தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை நாய் கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baby died after being bitten by a street dog


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->