பெங்களூருவில் பெரும் அதிர்ச்சி: பொதுமக்கள் முன்னிலையில் இளம்பெண் படுகொலை! - Seithipunal
Seithipunal



கர்நாடக மாநிலம், சிக்கபல்லாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணப்பா (43), தினசரி கூலி வேலை செய்துவரும் இவர், தனது மனைவி சாரதா (35) மீது துரோகம் செய்திருப்பதாகக் குழப்பமும் சந்தேகமும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. 

பலமுறை மனஉளைச்சலுடன் வாழ்க்கை நடத்தி வந்த கிருஷ்ணப்பா, மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, பெங்களூர், எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய சாரதா மீது, கணவன் கிருஷ்ணப்பா வழியில் காத்திருந்து ஆவேசமாக தாக்கி உள்ளார்.

பொதுமக்கள் இருக்கும் இடத்தில் திடீரென தனது பிளேடு போன்ற கூரிய ஆயுதத்தால் அவர் சாரதாவின் கழுத்தை அறுத்தார். சாரதா உடனே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கிருஷ்ணப்பாவை அப்பகுதியினர் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர் போலீசுக்கு தகவல் அளித்தனர். 

உடனடியாக வந்த போலீசார் சாரதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, கிருஷ்ணப்பாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bangalore husband kill wife in public


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->