தலைமை செயலக கட்டிடத்தில் திடீர் தீ விபத்து: தீயணைப்பு படை தீவிரம்!
Bhopal headquarters building fire accident
மத்திய பிரதேசம், போபாலில் உள்ள அரசு தலைமை செயலகமான வல்லப் பவன் கடிதத்தின் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தீ பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியேறுவதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
இந்த தீ விபத்து குறித்து மத்திய பிரதேச முதல்வர், ஆட்சியரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த தீ விபத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் செய்தல் குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
English Summary
Bhopal headquarters building fire accident