ரவுண்டு கட்டிய சிபிஐ.. வணிகத்துறை "அதிகாரிகள் 3 பேர்" அதிரடி கைது.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் செயல்பட்டு வரும் தனியார் மருந்து தொழிற்சாலையிடம் அம்மாநில வணிகவரித்துறை அதிகாரிகள் 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக சிபிஐயிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் 100 அடி சாலையில் உள்ள புதுச்சேரி வணிகவரி துறை வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.

 புதுச்சேரி வணிகவரி அலுவலகத்தில் பணியாற்றி வந்த வணிகவரித்துறை பெண் அதிகாரி ஜெயபாரதி என்பவரிடம் நடத்திய விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் அடிப்படையில் புதுச்சேரி வணிகவரித்துறை துணை ஆணையர் ஆனந்தன், முருகானந்தம் மற்றும் வணிகவரி ஆலோசகர் சித்ரா ஆகிய 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கை புதுச்சேரி அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cbi arrested 3 puducherry commercial tax dept officers


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->