தேர்வில் ஆள் மாறாட்டம் - கையும் களவுமாக சிக்கிய கல்லூரி மாணவர்.!!
college student arrested for Impersonation in kerala
கேரளா மாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்புக்கான மேம்பாட்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அதன் படி நாதாபுரத்தில் உள்ள கடமேரி ஆர்.ஏ.சி. மேல்நிலைப்பள்ளியில் உள்ள மையத்தில் ஏராளமானோர் தேர்வு எழுதினர்.
அப்போது ஒரு தேர்வரின் நடவடிக்கை தேர்வு மைய கண்காணிப்பாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அறை கண்காணிப்பாளர் அவரது விவரத்தை சரிபார்த்தார். இதன் மூலம் சந்தேகம் மேலும் அதிகமானதால் பள்ளி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

அதன் படி அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் சந்தேகத்திற்குரியவர், ஆள்மாறாட்டம் செய்து தனது நண்பருக்காக தேர்வு எழுதுவது தெரியவந்தது. மேலும், அவரது பெயர் இஸ்மாயில் என்பதும், கல்லூரி மாணவரான இவர், தனது நண்பர் தோல்வி பயத்தில் இருந்ததால் அவருக்காக தேர்வு எழுத வந்ததும் தெரிய வந்தது.
அதன் பின்னர் பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி இஸ்மாயிலை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
college student arrested for Impersonation in kerala