முன் பதிவு செய்த பயணிகளை ஏற்றிச் செல்ல மறுத்தால் இழப்பீடு வழங்க வேண்டும்! விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றி செல்ல மறுத்தால், இழப்பீடு வழங்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ எச்சரிக்கை விடுத்துள்ளது.

சரியான நேரத்தில் விமான நிலையத்துக்கு வந்த பின்னரும் முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றி செல்ல விமான நிறுவனங்கள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளன. இந்த புகாரின் அடிப்படையில் டிஜிசிஏ, பயணிகள் குறித்த நேரத்தில் விமான நிலையத்துக்கு வந்து விட்டால் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது. 

மேலும் இது பயணிகளுக்கு முற்றிலும் அநீதி இணைப்பதாகும் என்று கண்டித்து, முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றி செல்ல மறுக்கும் விமான நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும், பயணிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிசிஏ எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Compensation for refusing pre booked passengers


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->