பொதுக் குழாயில் தண்ணீர் குடித்த தலித் இளைஞர்! அடித்து கொலை செய்த அவலம்! - Seithipunal
Seithipunal



உத்திர பிரதேசத்தில் பொதுக் குழாயில் தண்ணீர் குடித்ததற்காக தலித் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசம், சத்ரா கிராமத்தில் கமலேஷ் (வயது 24) அங்குள்ள ஒரு குழாயில் நேற்று முன்தினம் இரவு தண்ணீர் குடித்துள்ளார். 

அப்போது அந்த பகுதியில் இருந்த சூரஜ் ரத்தோர் மற்றும் அவரது கூட்டாளிகள் பொதுக்குழாயில் தண்ணீர் குடித்ததற்காக கமலேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். 

இதில் படுகாயம் அடைந்த கமலேஷ் மீட்க பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இது தொடர்பாக கமலேஷன் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சூரஜ் ரத்தோர் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர். 

மேலும் உயிரிழந்த கமலேசன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dalit youth drank water public tap and killing


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->