இ- சிகரெட் தடையை மீறினால் நடவடிக்கை: எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!  - Seithipunal
Seithipunal


கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு மின்னணு சிகரெட் தடைசெய் தடை சட்டத்தை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் இ-சிகரெட் எனப்படும் மின்னணு சிகரெட்டுகளை உற்பத்தி செய்வது, ஏற்றுமதி, இறக்குமதி செய்வது, விளம்பரம், விற்பனை போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது. 

இ-சிகரெட்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்படவில்லை. இதற்கு இடையே இ-சிகரெட் தடை சட்டத்தில் சிறை தண்டனை, அபராதம் போன்ற விதிமுறைகளை மீறி புழக்கத்தில் இருப்பதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்தன. 

அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அதனை பயன்படுத்துவது மத்திய அரசுக்கு மேலும் கவலையை உண்டாக்குகிறது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் இ-சிகரெட் எந்த வடிவிலும் எந்த முறையிலும் வைத்திருப்பது சிகரெட் தடை சட்டத்தை மீறிய குற்றம் என தெளிவுபடுத்தியுள்ளது. 

இந்த தகவல் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றம் தான் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. 

மேலும் இந்த தடையை மீறுபவர்கள் குறித்து புகார் அளிக்க ஒரு இணையதளத்தையும் சுகாதாரத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

E Cigarette is crime central government warning


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->