உலக நாடுகளை அச்சுறுத்தும் நிலநடுக்கங்கள்.. பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்.!
Earthquake in Papua new Guinea 6.1 rictor measurement
கடந்த பிப்ரவரி 6ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 50,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஓய்வதற்குள் உலகம் முழுவதும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் இந்தோனேசியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், நேபாளம் மற்றும் நேற்று ஜப்பான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பப்புவா நியூ கினியாவில் உள்ள நியூ பிரிட்டன் நகரில் இருந்து 38 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.5ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த பொது மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
English Summary
Earthquake in Papua new Guinea 6.1 rictor measurement