லாரி மீது மோதிய ஆம்புலன்ஸ் - மருத்துவர் உள்பட 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் மாவட்டத்தில் இருந்து அகமதுநகரில் உள்ள மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு நோயாளியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த ஆம்புலன்சில் நோயாளியுடன் மருத்துவர், செவிலியர், ஓட்டுநர் உள்பட மொத்தம் நான்கு பேர் இருந்தனர்.

இந்த நிலையில், ஆம்புலன்ஸ் அம்போரா பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது முன்னால் சென்ற லாரி திடீரென இடது புறமாக திரும்பியுள்ளது. இதனால், வேகமாக வந்த ஆம்புலன்ஸ், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆம்புலன்ஸ் அடையாளம் தெரியாத அளவிற்கு நொறுங்கியது.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி அவர்கள் விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டு இருந்த மருத்துவர் மற்றும் மேலும் ஒருவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நோயாளியை அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி மருத்துவர் உள்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples died ambulance accident in maharastra


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->