சோகம்... மஹாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்ம மரணம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள துலே மாவட்டம் பிரமோத் நகர் பகுதியை சேர்ந்த பிரவீன் மன்சிங் ஜிராஸ் என்பவர் வேளாண் உர விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருடைய மனைவி கீதா பிரவீன் ஜிராஸ். இந்த தம்பதியினர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 4 நாட்களாக இவர்களுடைய வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்லவில்லை.சுமார் நான்கு நாட்களாக எந்த சத்தமும் இல்லாத நிலையில், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் பிரவீனின் சகோதரியிடம் தகவல் தெரிவித்தனர்.

அதன் படி அவர் நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பிரவீன் தூக்கு போட்டபடி காணப்பட்டார். அவருடைய மனைவி, மகன்கள் விஷம் குடித்து, உயிரிழந்த நிலையில் கிடைத்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples died in maharastra


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->