#BREAKING | பாஜக எம்பி கங்கனா ரனாவத்தை கண்ணத்தில் அறைந்த பாதுகாப்பு படை பெண் காவலர்! - Seithipunal
Seithipunal


சண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்.பி. நடிகை கங்கனா ரனாவத்தை, மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர், கண்ணத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என கங்கனா ரனாவத் கூறியிருந்தற்காக பெண் காவலர் அறைந்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் தாக்கப்பட்ட சம்பவம் பாஜகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவரின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகவும், அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் பாஜகவினர் குரல் கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், சண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்.பி நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை பொதுத்தேர்தலில் பாஜக சார்பாக மண்டி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு கங்கனா ரனாவத் வெற்றி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பல்வேறு விவகாரங்களில் நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சை கூறிய கருத்துக்களை தெரிவித்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kangana Ranaut slapped by a CISF constable


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->