கர்நாடகா : ஆம்புலன்ஸ் வாகனம் கொடூர விபத்து.! நோயாளி உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம், உடுப்பி அருகே சுங்கச்சாவடியின் மீது, கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், நான்கு பேர் பலியாகினர்.

உடுப்பி மாவட்டம், பைந்தூரின் கடலோர பகுதியான ஷிரூரில் ஒரு சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. அந்த பகுதியில் இன்று மாலை கனமழை பெய்துவந்த நிலையில், ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சுங்கச்சாவடியை கடக்க முயன்றது.

உடனடியாக சுங்கச்சாவடி ஊழியர்கள் பாதையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை வேகமாக அகற்றும் பணியில் இரு ஓஷியர்கள் ஈடுபட்டனர்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸை வாகனம் சுங்கச்சாவடி மீது கொடூரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி காட்சிகள்படி, அதிவேகம் ஒரு காரணம் என்றாலும், சாலையில் மழை நீர் இருந்த காரணத்தினால் ஆம்புலன்ஸ் வாகனத்தின் டையருக்கும், சாலைக்குமான பிடிமானம் இல்லாமல் போகவே, ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வழுக்கியபடி சுங்கச்சாவடி மீது மோதுவது உறுதியாகிறது.  

இந்த கொடூர விபத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் பயணம் செய்த நோயாளி, அட்டண்டர் இருவர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என நான்கு பேர் உயிரிழந்தனர். 

மேலும் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டு, அதில் இருவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka uduppi ambulance accident


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->