ஆம்புலன்ஸ் மோதி கொடூர விபத்து., தூக்கி எறியப்பட்ட 5 பேர்.! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்.!  - Seithipunal
Seithipunal


கேரளா அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், மலப்புரம் அருகே ஆம்புலன்ஸ் ஒன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

மலப்புரம் : கடந்த வெள்ளிக்கிழமை மஞ்சேரி பகுதியிலிருந்து நோயாளிகளை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று, பையனாடு பகுதியில் சாலையில் கடக்க முயன்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

ஆம்புலன்ஸ் வாகனம் அந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதும் அந்த கொடூர காட்சி, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதன் காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ் மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த அனைவரும் தூக்கி எறியப்படும்  காட்சிகளை பார்ப்பவர்களின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த 3 பேருக்கு பலத்த காயமும், இரண்டு பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KERALA MALAPURAM AMBULANCE ACCIDENT


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->