#BREAKING | முன்னாள் முதலமைச்சர் பாஜகவில் இணைவு! இரு மாநிலங்களை புரட்டி போட்ட அரசியல் திருப்பம்!
Kiran Kumar Reddy Andhra Pradesh joins Bharatiya Janata Party in Delhi
டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது கடைசி முதலமைச்சராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிரண் குமார் ரெட்டி. தற்போது அவர் பாஜகவில் இணைந்து தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
கடந்த 2014 தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட போது, அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தவர் கிரண் குமார்.
பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில், தற்போது பாஜகவில் அவர் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
கிரண் குமார் ரெட்டி பாஜகவில் இணைந்திருப்பது ஆந்திர மாநிலம் மற்றும் தெலுங்கானா மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இவர் பாஜகவில் இணைந்து இருப்பதால், ஏற்கனவே பின்னடைவில் இருக்கும் காங்கிரசுக்கு மேலும் பின்னடைவாகவே எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Kiran Kumar Reddy Andhra Pradesh joins Bharatiya Janata Party in Delhi