அதிரடி காட்டும் ராகுல்காந்தி! மணிப்பூர்,அசாம் நேரடி மக்கள் விசிட்! குறைகள் கேட்டறிந்தார்! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையில் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை  எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் ஓராண்டு காலமாக பல்வேறு குற்ற சம்பவங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. மணிப்பூர் கலவரத்தில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், ராகுல் காந்தி, வன்முறை காரணமாக பல வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை குறித்தும் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

பின்னர் அங்கிருந்து, அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி தவிக்கும் மக்களை சந்திக்க சென்றார். அசாம் மாநிலத்தின் தொடர் பகுதியில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்ற ராகுல் காந்தி அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார் அவர்களிடம் குறைகளை கேட்டிருந்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆய்வு செய்ய ராகுல் காந்தி அங்கிருந்து புறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leader of the Opposition Rahul Gandhi met and consoled the people staying in the camps


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->